சென்னை: கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் கணவன் பராமரிப்பில் உள்ளனர்.மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது தெரியவந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related posts
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...பாடகர் ஆர். சுசித்ரா மீது சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், பின்னணி பாடகர் ஆர். சுசித்ரா (RJ சுசி) அவரது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பற்றி எந்த...