சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
Read MoreCategory: சென்னை சிறகுகள்
குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பிப்ரவரி 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
Read Moreஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை வெளியிட தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:சட்ட பஞ்சாயத்து இயக்கம் , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு ஊரக உள்ளாட்சிகளுக்கும், நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Read Moreசரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஜூவல்லரி கடையில் பணம் பறித்ததாக சென்னையை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் கைது
சென்னை:யுனிவர்சல் பிரஸ் மீடியாவின் துணைத் தலைவர் என்று கூறிய தனசேகர், அவர் மற்றும் 13 பேர் கடையில் போலி தங்கத்தை விற்பனை செய்வதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் கோரினர். ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ஒன்பது பேரை கைது செய்தனர். இதில் ஐந்து வக்கீல்கள் அடங்குவர், மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்தனர்.அவர்கள் பத்திரிகையாளர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என்று கூறியதாக கூறப்படுகிறது.அதில் வழக்கறிஞர்கள் எண்ணூரைச் சேர்ந்த எம்.ஜகதீஷ்வரன், கீழ்ப்பாக்கத்தில் இருந்து வி.ஸ்ரீராம், புதுப்பேட்டையை சேர்ந்த ஏ.அமனுல்லா, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பி.முருகன் மற்றும் கோடம்பக்கத்தைச் சேர்ந்த எம்.சுந்தர பாண்டிய ராஜா ஆகியோரை, அவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை அகற்றும் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சில் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் பயிற்சி…
Read Moreஆன்-லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஷேக் அப்துல்லா கடந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசுகளை விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.சென்னை உயர்நீதிமன்றம் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஷேக் அப்துல்லா தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
Read Moreசெவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
Read Moreபிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.
Read Moreசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி கே தஹில்ரமணி ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்
சென்னை :சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்தனர் .இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார்.நேற்று ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.
Read Moreபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும். பிறகு அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.
Read Moreதலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு – உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு
சென்னை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான நீதிபதி தஹில்ரமணி மேகாலயா. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் உத்தரவை ரத்து செய்ய அவர் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு நிராகரித்தது.இதனால் அவர் ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில்ரமணியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Read More