கடலூர்: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது அகில இந்திய மாநாடு, கடலூரில் நேற்று துவங்கியது. சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாநாட்டுக் கொடியை சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா ஏற்றி, பேசினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடரை விழாக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 33வது மாநாட்டை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாடு துவங்கியது. அகில இந்திய இணைச் செயலர் சுக்லா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை தலைமை உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் வாழ்த்திப் பேசினார். துவக்க விழாவில் வரவேற்புக் குழு கவுரவத் தலைவர்…
Read MoreCategory: வர்த்தக சிறகுகள்
வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும்: காங்கிரஸ்
Walmart can’t meet norms, Congress says other ‘marts’ will come அமெரிக்கா விலும் ஐரோப்பாவிலும் சில்லரை வணிகம் பல்தேசிய வியாபார நிறுவவங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட்ட காலம் 1970 களின் ஆரம்பகாலம். இதன் பின்னர் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டிலிருந்து மீள முடியாத நெருக்கடிக்குள் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் அமிழ்ந்துள்ளன. மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலன்றி வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழித்து மக்களை மேலும் வறுமைக்கு உட்படுத்தும் நோக்கில் வால்மார்ட் போன்ற அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனங்களை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளன. சில்லரை வணிகத்தில் இலாபமடையும் அன்னிய நிறுவனங்களின் உள்ளூர்த் தரகர்களின் நலன்களுக்காகச் செயற்படும் இந்திய அரசு மக்களை மந்தைகளாகவே கருதுகின்றது, தொலைத்தொடர்பு, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் அன்னிய…
Read Moreநாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?
Manmohan Singh assures industry of economic recovery புதுடில்லி:”நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சீர்திருத்த நடவடிக்கை:டில்லியில்,”அசோசெம்’ அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது என்ற உறுதியுடன்,மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும் பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்…
Read Moreஅமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்
India US to work together : Chidambaram வாஷிங்டன்: அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தின் 38-வது தலைமை உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய போது, இந்தியா பொருளாதார சீர்திருத்ததை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து புதிய தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் ஏற்படுத்துவது பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இதனால் பல இந்திய நிறுவனங்களின் அந்தஸ்து உயர்வதோடு அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். அது பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகவும் அமையும், என்று கூறினார். English Summary: India US to work together : Chidambaram Washington: Making a passionate plea to the US and Indian businesses to work together for a prosperous society, Finance Minister…
Read Moreதொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்
புதுக்கோட்டை: “”புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் வரை மானியமும், வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்,” என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மனோகரன் பேசியதாவது:படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு(2012-13) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்கள் துவங்க முன்வரும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிப்பதோடு, தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கான திட்ட மதிப்பீடு, அரசு மானியம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக்கொடுக்கப்படும்.குறைந்தபட்சம் 5…
Read Moreதங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!
gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…
Read Moreதங்கம் வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்காதீர்கள் : வங்கிகளுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
banks to advise their customers not to buy gold but to invest in financial assets : PC Chidambaram 07 ஜூன் 013: மும்பை: வாடிக்கையாளர்களை தங்கம் வாங்க, ஊக்கபடுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முன்தினம் இரவு அதன் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக திடீரென்று உயர்த்தியது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அன்னிய நாணய மதிப்புக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அன்னிய நாணய மதிப்புக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இதனிடையே, தங்கம் மீதான சுங்க வரி உயர்வால் எந்த பயனும் இருக்காது, அதன் விலை உயர்வுக்கு தான் வழி வகுக்கும் என்றும், உலக தங்க கவுன்சில் (இந்தியா)…
Read Moreரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!
Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். * ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…
Read Moreசீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை
Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங், மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில், தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh.
Read Moreதமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை
Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai Pan Masala and Gutka banned
Read More