சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்
