சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை செய்யாமல்,ஆதாரங்களையும் ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.சிவில் நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.மேலும் தமிழக அரசு சட்டப்படி செயின்ட் பேட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...