சென்னை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொருளாளர் அம்மாசியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் சிமெண்ட் தயாரிப்பாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் விலையை உயர்த்துவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் 5 மாதத்திற்கு முன்பு 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது .ஆனால் தற்போது 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் ஒப்பந்த பணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் 320 ரூபாய்க்கும் கர்நாடகாவில் 335 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒப்பந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு சிமெண்ட் விலையை குறைக்க பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...