சென்னை: சென்னையில் வழக்கறிஞர் எழில் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் எழில் சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். ” சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் எழில் என்ற வழக்கறிஞரை வேளச்சேரியை சேர்ந்த ரவுடி மூர்த்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரையும் அவருடன் வந்த அடியார்களையும் வேளச்சேரி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல்
