திருச்சி: கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருச்சியில் உள்ள பீமநகர் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை தனது வீட்டின் அருகே மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்தபோது திடீரென வந்த 6 பேர் கொண்ட கும்பல் கோபி கண்ணனை மகள் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் மணிகண்டன் விசாரணை நடத்தி உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களில் காட்சிப் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் மகள் கண் முன்னே வழக்கறிஞர் வெட்டி படுகொலை
