இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பம் :- மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி…

Finance Minister Arun Jaitley presented the Finance Ministry’s report card yesterday (Aug-30-2014) for the last 100 days since the NDA govt came to power, as well as the recent initiatives for development taken by the Finance Ministry. பா ஜ க வின் அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று மாதங்களின் அதிரடி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர்.திரு.அருண் ஜெட்லி கூறியுள்ளார். தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூன்று மாத நடவடிக்கைகள் பற்றி பத்திரிக்கை நிருபர்களிடம் சனிகிழமையன்று அவர் பேட்டியளித்தார். இதில் சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டின் முன்னேற்றமும், சாதகமான எதிர்காலப்போக்கும் திருப்தி அளிப்பதாகவும் அருண்ஜெட்லி கூறினார். முதல் 100 நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளின் பலன் வெகுவிரைவில்…

Read More

பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது

Coimbatore school Teacher stabbed to death by her drunked husband after suspecting her கோவை : பள்ளி ஆசிரியையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கத்தியால் குத்தி கொன்ற கணவன் கணவர் கைது.. கோவை ஆவாரம்பாளையத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோவில் வீதியில் வசித்துவருபவர் தனியார் பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி (வயது 29) இவரது கணவரின் பெயர் சந்தோஷ்குமார் (வயது 30). சந்தோஷ் குமார் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர். இவரது மனைவி உமாமகேஸ்வரி அதே பகுதியில் இருக்கும் ஓர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்விருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாசினி (வயது 6) என்ற மகளும், விகாஷ் (வயது 5) என்ற மகனும், இருக்கின்றனர். முதலில் மனைவியின் மேல்…

Read More

1000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் மோசடி வங்கி அதிகாரிகள்மிது போலீசார் ஒன்பது எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்துள்ளனர்

FD scam: Mumbai police files nine FIRs நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்திருப்பதாக நாட்டின் சில முக்கிய வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மும்பை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் இது தொடர்பாக 10 எஃப்.ஐ.ஆர்.(FIR)களைப் பதிவு செய்துள்ளனர். நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் கடன் பெறுவதில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென் இந்திய கல்வி சங்கம், மும்பை பெருநகர வளர்ச்சித் துறை மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் நிரந்தர வைப்பு நிதிகளின் மூலம் கடன்கள் பெறுவதில் இந்த மாபெரும் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது. தேனா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா,…

Read More

அமெரிக்காவில் 9 வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது தவறுதலாக பயிற்சியாளர் மிது குண்டு பாய்ந்து மரணம்

Shooting by 9-year-old girl stirs gun debate அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சார்லஸ் வாகா (39). லேக்கவுசு நகரை சேர்ந்த இவர் அரிசோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்த வெளி துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதி ஒன்று தங்களின் 9 வயது மகள் ஒருவரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுவதற்காக சேர்த்தனர். அச்சிறுமிக்கு சார்லஸ் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இயந்திரத் துப்பாக்கி ஒன்றின் மூலம் சார்லஸ் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read More

துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனையை மதம் மாறச்சொல்லி கணவன் கொடுமை….

 National shooter Tara Shahdeo was cheated and married saying that he is Hindu but after the wedding the husband tortured and forcing to convert as Muslim  துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை திருமதி.தாரா சாதேவ்(வயது 23), தனது கணவர் தான் ஒரு இந்து என்று ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி சித்திரவதை செய்ததாக ஜார்க்கண்ட் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவருடைய கணவர் இரஞ்சித் சிங் கோரி எனப்படும் இரஹிபுல் ஹூசைனை தில்லி அருகில் கைது செய்தார்கள். இந்த நிலையில் திருமதி.தாரா சாதேவ் தனது கணவர் இரஹிபில் ஹூசைனிமிருந்து விவகாரத்து பெறஇருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Ms Tara Shahdeo – a National…

Read More

கள்ள காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்…

Aam Aadmi Party member Chandra Mohan Sharma drama of ‘burnt to death’ in his own car at Greater Noida 3 months ago ended up after been caught alive in Bangalore.. பெங்களூர்: கள்ளக் காதலியுடன் உல்லாசமாக வாழ இறந்துவிட்டதாக நாடகமாடி தலைமறைவாக இருந்து குடித்தனம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரமுகர் திரு.சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் காவல் துறையினர் நேற்று கைது செய்தார்கள். திரு.சந்திர மோகன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகராவார். திரு.சந்திர மோகன் ஷர்மா,  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக அந்த கட்சியில் பொறுப்பில் உள்ளவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன டெல்லி அருகில் இருக்கும் ரேட்டர் நொய்டாவில் இவருடைய காரில் எரிந்து…

Read More

இங்கிலாந்தில் கார்ட்டூன் போன்று தன் உருவத்தை மாற்றி கொண்ட 30 வயது பெண்

christina england lady changed like cartoon 1.5 crore spent இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரூ.1.5 கோடி செலவு செய்து கார்ட்டூன் உருவம் போல தன்னை மாற்றி இருக்கிறார். இங்கிலாந்தில் யோர்க்ஷையர் மாகாணம் வேக்பீல்டு நகரை சேர்ந்த 30 வயது பெண் கிறிஸ்டினா. இவர் லிபிசா நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்டினா சுற்றுலா சென்றிருந்த போது சாலையோர ஓவியர் ஒருவரை சந்தித்தார். அந்த ஓவியர் கிறிஸ்டினாவை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தை பார்த்ததும் கிறிஸ்டினாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த கார்ட்டூனை பார்க்கும்போதெல்லாம் தான் ஏன் அந்த ஓவியம் போல் மாறக் கூடாது என்ற எண்ணம் கிறிஸ்டினாவுக்கு தோன்றியது. அந்த ஆசையை அடக்க முடியாமல், கார்ட்டூன் உருவம் போல மாற முடிவு…

Read More

‘காதல் என்றால் என்ன?' விளக்கமளித்த 6 வயது சிறுமி இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது

What is love? 6-year-old’s wise note on love is an eye-opener for all of us 6 வயது சிறுமி ஒருவர் காதல் என்ற வார்த்தைக்கு அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இலண்டனைச் சேர்ந்த எம்மா என்ற 6 வயது சிறுமி தனது காதல் என்பது குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. உண்மையில் இது அச்சிறுமி எழுதியதுதானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. காகிதம் ஒன்றில் மழலையான எழுத்தில் காதலுக்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், “காதல் என்பது உங்கள் பற்களில் சில எப்போது காணாமல் போகிறதோ, அப்போதும் நீங்கள்…

Read More

இங்கிலாந்தில் 3 வயது மகனை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மனிக்கு 11 ஆண்டு சிறை

Indian-origin woman gets 11 years in UK jail for son’s murder இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ் தீப் அதியோகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 3 வயதில் மிகாயில் குலார் என்ற மகன் இருந்தான். சம்பவத்தன்று இவர் தனது மகன் மிகாயில் குலாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தார். அதில் அவனது இடுப்பு, முதுகு, நாடி, முகம், கன்னம், தலை உள்ளிட்ட 40 இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. எனவே, அவன் பரிதாபமாக இறந்தான். எனவே அவனது பிணத்தை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்தார். பின்னர் அதை காரில் 20 கி.மீட்டர் தூரம் எடுத்து சென்று கிர்க்கால்டி என்ற இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டின் பின்புறம் புதரில் வீசினார். தனது மகன் மிகாயில் குலாரை காணவில்லை என நாடக மாடினார். ஆனால்…

Read More

லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…

Read More